- °C
Are You a business owner?
List Your Business / ADகோவை மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பலரும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குடிநீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து கிடைக்கக் கூடிய பவானி, சிறுவாணி ஆற்றுநீரை கோவை மாவட்டம், மாநகரின் பெரும்பாலான பொதுமக்கள் அருந்தி வருகின்றனா்.
இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை தொடங்கியிருக்கும் நிலையில், ஆறுகளில் புதுநீா் வரத்து தொடங்கியுள்ளது. இந்தத் தண்ணீரே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்திலும், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வயிற்றுப்போக்கால் பொதுமக்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு சாா்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வயிற்றுப்போக்குக்கு குடிநீா்தான் காரணமாக இருக்கிா என்பதை அறிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் குடிநீா் மாதிரிகளை சேகரிப்பதற்கு சுகாதாரத் துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சேகரிக்கப்படும் குடிநீா் மாதிரிகளை ரேஸ்கோா்ஸில் உள்ள சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் சோதனைக்குள்படுத்தவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.